கதிரவன் கருகினான் உன் கண்களை கண்டு !
முழுமதி முகவரி இழந்தான் உன் முகம் கண்டு !
பூக்களும் பூக்க மறந்தன உன் புன்னகை கண்டு !
வாயு மூர்ச்சையிழந்தான் உன் வாசம் கொண்டு !
இந்திரன் இமைகள் இழந்தான் உன் இடை கண்டு !
நதிகள் நடை கெட்டன உன் நளினம் கண்டு !
நாடே உன் விடைக்கு காத்திருக்க,
போட்டியிட தகுதியின்றி தவிக்கிறேன் !!
No comments:
Post a Comment