Saturday, August 17, 2013

ஹாசினி




கவிதை கொட்டும் கண்கள்,
அதற்கு வர்ணம் தீட்டும் கண்மை !


சாயமின்றி சாய்க்கவல்ல உதடு.
பூக்கும் பூக்கள் தோற்கும் புன்னகை!

போர்களை மூட்டிடும் சங்கன முழங்கும் குரல் !

பிரம்மன் கண்ட கனவின் விடை உன் இடை
உலகம் நாடக மேடையென உணர்த்தும் நடை


கவிதைக்கு பொய் அழகாம்
பின் வரும் மெய்களும் அழகுதான்
, ;-)

பாலுணர்வு பொய்யென்று அதற்கு
பாடைகட்டிய உன் நட்பு !!

கானல் நீரென கண்டேன் உன்னை,
காவிரி வெள்ளமாய் தனித்தாய் என்தாகம் !


என் தனிமையை உடைத்தெறிந்த பெண்மையே
உண்மையில், என் ஹாசினி
என் சுவாசம் நீ
 !!!!

No comments:

Post a Comment